இந்தியா

74 ஆண்டுக்குப் பின் இந்தியா வரும் சிறுத்தைகள்: புலி டிசைனுடன் நமீபியா சென்ற சிறப்பு விமானம்

புதுடில்லி: 1948ல் இந்தியாவின் கடைசி சிறுத்தை இறந்தது. அதன்பிறகு நாட்டில் சிறுத்தை இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறுத்தை இனத்தை பெருக்கும் நோக்கில் நமீபியா நாட்டில் இருந்து 8 சிறுத்தைகளை இந்தியா பெற உள்ளது. சிறுத்தைகளை அழைத்து வருவதற்காக புலி வடிவ டிசைனுடன் சிறப்பு விமானம் நமீபியா சென்றடைந்தது.

நம் நாட்டில் சிறுத்தைகள் இனமே இல்லை. கடைசியாக, சத்தீஸ்கரின் கோரியா பூங்காவில் இருந்த சிறுத்தை, 1948ல் இறந்தது. இதையடுத்து, 1952ல் இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் இந்தாண்டு ஜூலை 20ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என எட்டு சிறுத்தைகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்குகிறது. இந்த சிறுத்தைகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளன

இதற்காக, சிறப்பு விமானத்தில் இந்த சிறுத்தைகள், நமீபியாவில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு, வரும் 17ம் தேதி காலையில் அந்த விமானம் வருகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, இந்த சிறுத்தைகள் மத்திய பிரதேசத்துக்கு எடுத்து வரப்பட உள்ளன. பிரதமர் மோடி தன் பிறந்த நாளான 17ம் தேதி, இந்த சிறுத்தைகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார். இதற்காக இன்று இந்தியாவில் இருந்து நமீபியா சென்றடைந்த சிறப்பு விமானத்தில் நமது தேசிய விலங்கான புலி வடிவில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your Adblocker